Friday, January 1, 2021

அட்டை

வண்டி பிராங்க்பெர்ட்   விமானநிலையத்தை நோக்கி  ஓடிக்கொண்டிருந்தது. ஜன்னல் கரையில் அமர்ந்து வேகமாக  விடைகொடுத்து நகரும் கட்டடங்களையும்  மரங்களையும்  பார்த்துக்கொண்டிருந்த அச்சு  அருகிலிருந்த அம்மாவின்  பக்கம் திரும்பினாள். அம்மாவின்  முகத்தில் ஒரு வித ஒளிர்வையும் , இனங்காண முடியாவோர் இறுக்கத்தையும் கவனித்தாள்.

 ஊருக்குப்போவதாக  முடிவெடுத்த  நேரத்திலிருந்தே  அம்மாவின் முகத்தில் அந்த வித்தியாசத்தை  அவதானித்திருந்தாள் அச்சு. பொதுவாகவே ஊருக்கு வெளிக்கிடும் ஒவ்வொரு தரத்திலும்  அம்மாவின்  முகத்தில் ஒரு பிரத்தியேக  மாற்றம்  தெரிவதை அவள் அவதானித்திருக்கிறாள்.    ஊரில் நிற்கும் நாட்களில் குடத்தில் இருக்கும் தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட  அவாவும் ஒரு காகத்தின் அதகடி  அவள் கண்களில்  அலைபாய்ந்து கொண்டிருக்கும்.    ஆனாலும் . மீண்டும் ஐரோப்பாவுக்குத்  திரும்பி வரும் போது அவள் எதிர்பார்த்த  எதுவோ நடக்கவில்லையான  ஏக்கம் கண்களில்  கலங்கலாக  எஞ்சி வெறித்து நிற்கும். , வந்த  பின் அது எப்போதும் போல  எழுதிவைத்த கண்கள் போலாகி விடும் .அம்மா  வழமைபோல வேலைத்தளம் வீடு என இயந்திரகதியில்  இயங்க  ஆரம்பித்து விடுவாள். எந்த இயக்கத்தின் போதும் மாற்றமற்று   அந்தக் கண்கள்   அச்சுவின் பார்வைக்கு  சித்திரத்தில் எழுதிய கண்களைப் போலிருக்கும்.  


அச்சுவின் சிறுவயதிலிருந்தே அம்மா எப்போதாவது தானும்  அச்சுவும்  தனியாக உள்ள  நேரங்களில்  கதைகள் சொல்லுவாள். அவை யாரோ  எழுதிவைத்தவையல்ல.  அம்மாவின் கதைகள் அம்மாவிடமிருந்து தான் வந்தன.  .  அந்தக் கதைகள் அவள்  பிறந்து  வளர்ந்த  மண் பற்றியதாக  இருந்தன.  


அம்மாவின்  கதைகளில்  வந்த ,  அநேகமாக    நிறைய களைத்து  வியர்த்தவர்களாக   எப்போதும் இருக்கும்  அந்த நபர்களிடம்   ஒரு நிமிர்வு  இருந்தது.  அப்படியான  சிலரின் பெயர்களை அடிக்கடி  உபயோகித்தாள் .


அப்படி  அவள்  உபயோகித்த  பெயர்களில்  ஒன்று  டானியேல்.   வேறு யாருடையதோ கதைகளைச் சொல்லும் போது  கட்டாயம் போலும் , நிராகரிக்க முடியாதது  போலும் சிலவேளைகளில்   இந்தப் பெயர் வந்து புகுந்து கொள்ளும்.  புகுந்து  கொண்டதானால் சட்டென  அந்தக் கதை தடைப்பட்டு  விடும்.  அம்மா  இலக்கற்று  எங்கோ வெறிப்பாள். பட்டென  அவள் கண்கள் கலங்கி  முட்டும் . ஏதோ  தவறு செய்த பதட்டத்தில் உதடும் அவள் கைகளும்  நடுங்கும்.  அதற்கு மேல்  அம்மாவை  இழுத்து,  விட்ட இடத்திலிருந்து தொடர வைத்தாலும் , சுவாரசியம் அற்று ஏதோ  ஒப்புக்கு  இரண்டு வரிகளில்  கதை முடித்து  விட்டு அச்சுவின் தலையைத்  தடவியவாறே  "தப்புச் செய்திட்டேன்  அச்சு "என்பாள். 

"உனக்கென்று  உள்ள   இரகசியங்களை  மனதில்  மறைத்து வைக்கப் பழகிக் கொள் " என்பாள்.  இன்னோர்  இப்படியான  பொழுதில் . . குற்றஉணர்ச்சியற்று  வாழ்தலே  வாழ்வின் மிகப்பெரும் நிம்மதி . நீ உனக்கானவைகளை  உனக்குள் வைத்திருக்கக் கற்றுக் கொள்  சம்பவங்களோடு  சம்பந்தமில்லாத  எவரிடமும் எதையும்  என்றும் உளறி விடாதே"  என்பாள். 


அச்சு வளர்ந்த போது, அம்மாவின் கதைகளிலிருந்து  அம்மா வளர்ந்த  வீட்டைச் சுற்றி  போராளி முகாம்கள்  இருந்ததைப் புரிந்து  கொண்டாள்.  அம்மா  சிறுமியாக  இருந்த போதிருந்தே  அவர்களுக்கு  மத்தியில்  வளர்ந்ததனால்  அவர்களுடன்  அதிக  நெருக்கம் கொண்டவளாகவும்,   அவர்களது நம்பிக்கைக்கு   உரியவளாகவும்  இருந்திருக்கிறாள். ஒரு காலத்தில்  அவளது  சுற்றம்  சூழல்  எல்லாம்  அவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.   அவள் தன் வீட்டு  வாசல் தாண்டுவதானாலும்  அவர்களைக் கடந்தே செல்லவேண்டியிருந்திருக்கிறது.  என்றான  சூழலில்  அவளுக்கு  பலரைப்பற்றியும்  நிறையவே  தெரிந்திருக்கிறது. அவர்களது  குடும்பங்களுடன்  பரிட்சயம் இருந்திருக்கிறது என்பதை  ஊகித்துக் கொண்டாள். 


அச்சுவும் அம்மாவும் சேர்ந்திருந்து வெளிநாட்டுப் போராட்டப் படங்கள்  பார்க்கும் போது  அம்மா  அடிக்கடி முகத்தைச் சுளித்துக் கொள்வாள். உடலைச் சுற்றி  துப்பாக்கி ரவைகளை  அணிந்திருக்கும்  நடிகனைப்  பார்க்கும் போது "துடைப்பக்கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டியது போலிருக்கு .  ஆயுதம் தூக்கிற  நிமிர்வும்  தீரமும்   கண்களில  இருக்கவேணும்  தெரியுமோ  அச்சு". என எழுந்து கொள்வாள் .  "வாம்மா " என அழைத்தால்  "அப்போது டானியல் ரவைக்கோர்வைகளை உடலில் சுற்றிக் கொண்டு தன்னுடைய  முகாம் போராளிகளை  வழிநடத்தி களத்துக்குக் கூட்டிப்போக  வாகனத்துக்கு  அருகில் ஆயத்தமாய்  நிற்பார்  பார். அந்த நிமிர்வுக்கு இந்த நோஞ்சான்  நடிகன் பிச்சை  வாங்க வேண்டும்" என்பாள். இன்னொரு நாள் அந்தப் பெயர் தேவன்  ஆக மாறியிருக்கும். வேறொருநாள்  அது வெள்ளை  என்றிருக்கும்.. வேறும் நாட்களில் அது வேறு வேறாக இருக்கும்.   ஆனாலும்  . கண்கள் ஏதோ   ஒரு காலத்தை    தன் பார்வையில் சுமந்திருக்கும் அப்போது  அம்மாவின் முகம்  வேறு மாதிரி ஜொலிக்கும். . ஆனால் டானியேல் என்ற பெயர் குறிப்பிட நேர்ந்து விட்டால் ,  பின் சட்டென  உடைந்து அதே குற்றவாளித் தோரணையில்   குறுகி ஒடுங்கிப் போவாள். 


அம்மாவின் கதைகளிலிருந்து, ஒரு முகாமின்  பொறுப்பாளனாகவும், ஒரு படைப்பிரிவை  வழிநடத்துபவனாகவும், திடகாத்திரமான நிமிர்ந்த  மனிதனாகவும்  அச்சு  அந்த டானியலை தனக்குள்  உருவாக்கியிருந்தாள்.  டானியல்  பற்றிப் பேசும் போது அவளில் ஏற்படும் உணர்வு மாற்றங்களை அச்சு  வளரும் போது  தனக்குப்  புரிந்த விதத்தில்  கணிக்கத் தொடங்கியிருந்தாள் 


அம்மாவுக்கும்  அச்சுவின்  தந்தைக்கும் பெரிதாக  நெருக்கம் எதுவும் கிடையாது.  மாதத் தொடக்கத்தில் தனக்கான  அத்தனை செலவையும் கணக்குப் பார்த்து மேசையில்  வைத்து விடும் அம்மா அதிக வசதிகள் கொண்ட அந்த வீட்டில்   அன்னியப்பட்டு ஒதுங்கி அச்சுவுக்காகவே அந்த வீட்டில்  இருப்பது போல  தோன்றும்.  அந்த   நெருக்கமின்மைக்கும்  டானியேல்  தான் காரணமாக இருக்கவேண்டும் என  எண்ணத் தலைப்பட்டு  பின்னாளில்  அதுதான் என  தனக்குள் உறுதி செய்தும்  கொண்டாள்.    பெற்றோர்  எனினும் அவர்கள்  தனிப்பட்ட  வாழ்வை  அலசுவதும் விமர்சிப்பதும்  தனக்கு  உரிமையற்றது  என்ற  மேல்நாட்டு  மனப்பான்மையில்   வளர்த்திருந்தாள்.  


அச்சு தன்   அம்மாவை அவளது   இயல்பான இருப்பில்  மென்மையானவளாகவே புரிந்து வைத்திருக்கிறாள்.  , அதிகமாய்  அதிர்ந்து பேசிக் கூட  அச்சு பார்த்ததில்லை.   ஆனால் "கொம்மா  விசரி  வாழத்தெரியாத லூசு"  என  அடிக்கடி  எரிச்சலாக முணுமுணுக்கும்   அவளது  தந்தை  அம்மாவின்  எதிரில்  சொல்லும் போது அம்மா  தலை நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்ப்பாள். அந்தப்  பார்வை  மிகப் பயங்கரமான  சீறும்அனல் போலிருக்கும் .  "அடுத்தவன்  வாழ்க்கையைப் பறித்து  சுகம் தேடும்  எல்லாருக்கும்   மற்றவர்கள்  எல்லாம் வாழத் தெரியாத பைத்தியமாகத் தான் தெரியும் " என்பாள். ஒவ்வொரு சொல்லும் பற்களில்  நெரிபட்டு  சத்தமற்றுத் தெறிக்கும்.  அப்போது அம்மாவைப் பார்க்க  மிகப் பயங்கரமாக இருக்கும். அதற்கு மேல்  பேசமாட்டாள்.  விலகிச் சென்று விடுவாள். 


"அந்த மண்ணை  எவ்வளவோ  நேசிக்கும் நீ  ஏன்மா  இங்கு வந்தாய்?"  என அச்சு ஒரு போது தன் அம்மாவிடம் கேட்டாள்.. "நேசித்ததால்  தான் " என பெருமூச்சுடன் அம்மா  விலகிப் போனாள்.  அம்மா  பதில் சொல்லாத விடயங்களில்  எப்படி முயன்றாலும்  பதில் பெற்று விட முடியாது  என்பது  அச்சுவுக்குத் தெரியும்  ஆதலால் பதில் கிடையாத கேள்விகளை  அவள்  திரும்பவும் எப்போதும் கேட்பதில்லை. 

ஆனாலும்  அம்மாவின் சகோதரர்கள்  வந்து போகும்  போது  பேசிக்கொள்வதிலிருந்து  அம்மா போராளிகளுடன்  இணைந்து  சென்று விடக் கூடும்  என்ற  பயத்தில் வெளிநாட்டிலிருந்த  சகோதரர்கள்  இங்கு  அழைத்துக் கொண்டார்கள்  என்பதும்,  அப்பாவுக்கு  மாரடைப்பு வந்து விடும் ,  நான் கிணத்துக்குள்  குதித்து விடுவேன்  என பயங்காட்டி அம்மாவின் தாய்  அம்மாவைச் சம்மதிக்க வைத்து   வெளிநாட்டுக்கு  அனுப்பியிருக்கிறார்கள்  என்பதும் இங்கு வந்த பின்  அச்சுவின் அப்பாவைத்  திருமணம் செய்து  வைத்திருக்கிறார்கள்  என்பதும் , திருமணம்  செய்த பின் அச்சுவின் அப்பாவுக்கு  வதிவிட  அனுமதியும்  அச்சுவும் ஒரே காலப்பகுதியில்  கிடைக்கப்பெற்றிருக்கிறார்கள்  என்பதும் புரிந்தது. 


,  இந்த வதிவிட  அனுமதி  கிடைக்கும் வரை  அம்மா அப்பாவுடன்,  சாதாரணமாகத்தான்  இருந்திருக்கிறாள். இப்போது போல எந்த இறுக்கமும் அற்றவளாக , அச்சுவுடன்  பேசுவதைப்  போல  அல்லது  அதைவிட  அதிகமாக  அவள்  அப்பாவுடன்  அனைத்தையும்  பேசியிருக்கிறாள்..  எப்போதும் தான் வளர்ந்த சூழல் பற்றி,  சூழ  இருந்த மனிதர்கள் பற்றி போராட்டம் பற்றி,  களங்கள்  பற்றி,  காயங்கள்  பற்றி,  அவர்களின் குடும்ப  அவலங்கள்  பற்றி தான் அறிந்தவையெல்லாம்  அம்மா  பேசியிருக்கிறாள்.      அதன் பின் தான்  ஏதோ ஆகியிருக்கிறது.  நொறுங்கிப் போயிருக்கிறது  என்பதை  அச்சு புரிந்து கொண்டாள். .


அவர்கள்  கட்டுநாயக்கா  விமான நிலையத்தில்  இறங்கினார்கள்.அம்மாவின் கண்கள் வரைந்தது போலல்லாது  ஒளிரத்தொடங்கியத்தை  அது கலங்கியதை  அச்சு அவதானித்தாள்.  இம்முறைப் பயணத்தில்  அச்சு  பதினெட்டு வயது நிரம்பிய, பல்கலைக்கழகம் செல்லும் பெரிய பெண்ணாக வளர்ந்து  விட்டிருக்கிறாள் . தன்னைச் சுற்றிய  ஒவ்வொரு விடயங்களையும்  ஆராய்பவளாகவும்  அறிந்து கொள்ள  விரும்புபவளாகவும் தேடல்கள் கொண்டவளாகவும் மாறியிருக்கிறாள்.      


அவர்கள்  யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்கள். இடையில்  அனுராதபுரத்திலும்  , புத்தளத்திலும்  உணவுக்காக வாகனம் நிறுத்தப்பட்ட போது  இறங்குவதற்கும் உண்பதற்கும் அம்மா  ஆர்வம் காட்டாது  வாகனத்துக்குள்ளேயே  அமர்ந்து கொண்டதை தாம்  இறங்கிச் செல்லும் போது  கவனித்தாள்.  


பிறகு சுற்றுச் சூழல்  கானல்வெளி போலிருந்த  ஆளரவமற்ற இடத்தில்  வாகனம் நிறுத்தப்பட்ட போது  அம்மா இறங்கினாள். கண்களுக்குள்  அந்தப் பகுதி முழுவதையும்  விழுங்கி விடுபவள்  போலப் பார்த்தாள். இவர்கள்  அம்மாச்சி உணவகத்தில் தேநீரும்  வடையும்  உண்டு விட்டு  வந்தார்கள்.   வாகனத்தில் ஏறி  அமர்ந்த போது நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டுச்  சொன்னாள், "நாமெல்லாம்  ஐரோப்பியப்பிரஜைகளாக  பாதுகாப்பாக வாழ்வதற்கு  மூலகாரணமான  மூச்சுகள்  இந்த  அனல் வெளிகளில்  அவலமாக  மூசிக் கொண்டிருக்கக் கூடும் " என்று.  அச்சுவுக்கு  அரைகுறையாகவே அது புரிந்தது. 


அதன் பின் வாகனம் நகர நகர அம்மா வெளிக்காட்சிகள் அனைத்தையும்  கலங்கிய கண்களுக்குள் அப்படியே கோலி எடுத்துவிடுவது போல் பார்த்திருந்தாள்.  


அவர்கள்  வீட்டின் முன்  வாகனம் நின்று  கோன்  அடித்ததும்  பாட்டியும் தாத்தாவும்  அரக்கப்பரக்க  ஓடிவந்து  பெரிய  உயர்ந்த கேற்றை  அகலத் திறந்தார்கள்.  கேற்றிலிருந்து  வீட்டு வாசல் வரை சீமேந்துச் சார்  இழுத்து சிவப்புச் சாயமடித்த  பாதையில் ஓடி நின்றது வாகனம். இறங்கினார்கள் .   இரண்டடுக்கில் பெரிய   மாடிவீடு பொலிவாக மின்னியது. 


பாட்டி வந்து கட்டிப்பிடித்து  முத்தமிட்டாள்.  தாத்தா  "வாருங்கோ குஞ்சு"  எனக் கூட்டிக்கொண்டு முன்னே நடந்தார்.  கூடவே வந்த  பாட்டி சொன்னாள்  "எல்லாம் பிள்ளைக்கு வசதியா  இருக்கோ எண்டு பாருங்கோ .  நீங்கள்  மாமாமார்  குடும்பத்தோட  லீவுக்கு வந்து நிண்டு போறதுக்காக  அங்கே நீங்கள் இருக்கிற  வசதிகளோட  பார்த்துப் பார்த்துக் கட்டிவிச்சனான்கள் " என்று .  அம்மா வாசல் படியில்  ஏறி நின்று மதிலுக்கு  அந்தப்பக்கம் கவனிப்பாரற்று மங்கிக்  கிடந்த  தான் பிறந்து வளர்ந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  


அம்மாவின் அம்மா  அம்மாவின் அருகில் போனாள். "உதென்ன பிள்ளை பழையதை  எட்டிப்பார்த்துக்கொண்டு நிக்கிறாய்.  உள்ளவந்து எதையும் குடிச்சுச் சாப்பிடன் " என்றாள்.  அம்மா  திரும்பினாள். முகம் கசங்கியிருந்தது.  

"இப்ப வெளிக்கிட்டுத் திரிய   ஆமிப்பயம்  இல்லையோ?"  என்றாள்


"சீ சீ  அவங்கள்  ஒண்டுக்கும் வராங்கள்"


"அப்ப போராளிகள்  எல்லாம் சாதாரணமா  திரியலாமோ?" 


"ஓம்  உங்க  ஆர்  இப்ப போராளி. எல்லாரும் தான் திரியீனம் .  ஆருக்கு ஆரெண்டு தெரியும்" 


"எங்கட  வீட்டுக்குப் பக்கத்தில  இருந்தவை  ஆரையும்  கண்டனீங்களோ?" 


"க்கும்  விசர் தொடங்கிவிட்டுது."   அச்சுவின் அப்பா வெளிநாட்டு விஸ்கியை கண்ணாடிக் குவளையில் ஊற்றிக்கொண்டே , பொரித்த கோழிக்கால் ஒன்றை வாயில் வைத்துக் கடித்த படி  முணுமுணுத்தார்.  அம்மா அதைச் சட்டை செய்யவில்லை  இப்போது.  தனது விசாரிப்பில்  மும்முரமாக  இருந்தாள்


"ஆருக்குத் தெரியும் பிள்ளை  இருக்குதுகளோ  செத்துப் போச்சுதுகளோ  எண்டு.  பழசை  தேடுறதை  விட்டுப்போட்டு  எல்லாத்தையும்  மறந்து  சந்தோசமா  வாழுற வழியைப்பார். " 


"ராசையா அண்ணை  இங்க ஊரில   தான் இருக்கிறாரோ..?"  


"ஓமோம்  அவன் இஞ்ச  தான்.  நீங்கள் வாறியள்  எண்ட உடன  ஓடித்திரிஞ்சு  கழுவத் துடைக்க  இடிக்க  என்று  ஆள்ப்பிடிச்சு  எல்லா அலுவலும் பார்த்தது  அவன் தான்.  சாமான் சக்கட்டு வாங்கித்தர பின்னேரமா  வருவான். "


அம்மா  பின்னேரம் வரை  காத்திருந்தாள்.  ராசையா  அண்ணை  வீட்டு வாசல் தாண்டி உள்ளே  வராமல்  வெளியிலேயே  நின்று  நலம் விசாரித்தார் .  அம்மா வெளியே  போய்  உள்ளே அழைத்தாள். வெளிவாசலுடன் நின்று கொண்டார். அம்மா எதற்கோ  ஆத்திரத்துடன்  காலைத் தரையில்  உதைத்து  நடந்தாள்.  கதிரையை  இழுத்துப் போட்டு  வெளி வராண்டாவில் வற்புறுத்தி  அமரவைத்தாள்.  அம்மாவும்  அவரும் பேசிக்கொண்டதில்  மிகுந்த அன்னியோன்னியம்  இருந்ததை  அச்சு  கவனித்தாள். 


"விசாரிச்சீங்களோ  அண்ணை?". 


"ஓம் பிள்ளை.  ஒவ்வொரு  தரமும்  நீங்கள்  வந்து  சொல்லிப்போட்டுப்  போகும் போது  விசாரிக்காமல்  இருப்பேனோ.   நானே சொல்லவேணும்  எண்டு தான்  காத்திருந்தனான் "


"அப்போ ?"


"ஓம்   தகவல்  கிடைச்சது.  ஆள்  உயிரோட  தான் இருக்குதாம்." 


பின்  ஏதோ  தொடர்ந்து  பேசிக்கொண்டிருந்தார்கள். "முகுந்தன்  எண்டு சொன்னால்  தான் தெரியும்.   சந்தை  நேரம் தான்   ஆளைப் பிடிப்பது  இலகு  பிள்ளை ." என்பது மட்டும்  அச்சுவின் காதில்  விழுந்தது  அம்மாவின் முகத்தை  இப்போது  ஹாலில்  இருந்த அச்சுவால்  கணிப்பிட முடியவில்லை.  அவள் அச்சுவுக்கு முதுகு காட்டி  அமர்ந்திருந்தாள்.  


அடுத்த நாள்  காலையில் அம்மா  மிகவும் பரபரப்பாக இருந்தாள்.  தாத்தாவிடம் சொல்லி  ஒரு ஓட்டோவை  வரவழைத்தாள். அச்சுவையும்  துணைக்கு அழைத்துக் கொண்டு  வெளிக்கிட்டாள்.  எங்கே  என்று கேட்கத் தோன்றவில்லை.  அது அச்சுவுக்குப் பரீட்சயமில்லாத  இடம்.  ஆகையால்  யாராவது  அழைத்துச் செல்லும் இடத்துக்குத் தான் போக முடியும். அத்துடன்  அம்மாவின் பரபரப்பு  அச்சுவுக்குப் புரிந்தது  ஆதலால்  கேட்கத் தோன்றவில்லை. 


நீண்ட தூரம்  போனார்கள் .  ஓட்டோ  ஒருமணி  நேரத்துக்கும் மேலாக  ஓடியது.  ஒரு பெரிய  சந்தைக்கருகே ஓட்டோவை  நிறுத்தி காத்திருப்பில்  வைத்து  இறங்கினாள்  அம்மா. அச்சுவை  இறங்கு என்றோ  இறங்காதே  என்றோ  சொல்லாததால்  அம்மா  உடனே வந்து விடுவாள்  என  அவள் ஓட்டோவுக்குள்  காத்திருந்தாள்.  வாசலில் பெரும்கடை  விரித்திருந்த  ஒருவரிடம்  அம்மா  எதுவோ   விசாரிப்பது  தெரிந்தது. அச்சு அருகே  இருந்த கடைகளை வேடிக்கை பார்த்தாள்.  பின் ,  மொபைலை  எடுத்து  கண்டிகிரஷ்சாகா  விளையாட ஆரம்பித்தாள்.


விளையாடிச் சலித்து நிமிர்ந்தாள்.   அம்மா   வேறு யாருடனோ  குனிந்து  பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அருகே  சென்றாள் .  கறுத்து வறண்டு மெலிந்து கிடந்த  அந்த மனிதரின் முகத்தை மறைத்திருந்தது  பலநாட்கள்  சவரம் செய்யப்படாத  நரைத்த  தாடி மீசை. முன்நெற்றி முடி முழுவதும்  கொட்டியிருந்தது. வழமைக்கு ஒவ்வாத  விதமாக காலை மடித்து, ஒரு கரத்தில் தன் உடல் பாரத்தை  ஊன்றி   சாய்வாக   ஒரு சாக்கில்  அமர்ந்திருந்த அவர் நிமிர்ந்து முகம் பார்க்க  அல்லது  காட்ட விரும்பாதவர்    போலக் குனிந்து கொண்டே  சன்னமான குரலில் பேசிகொண்டிருந்தார். .  அவர்  முன்னே    நான்கைந்து  தேங்காய்களும்  வெங்காயம், பச்சைமிளகாய், சில  வாடிய  கீரைக்கட்டுகள், கொஞ்சம் கத்தரி  தக்காளி  என  ஒரு  சாக்கில்  பிரித்து வைக்கக் கூடிய  சிறு சிறு குவியல்கள்  பரப்பபட்டிருந்தன.  


அச்சுவுக்குச் சலிப்பாக  இருந்தது  அம்மா அவருக்காகக்  காத்திருந்தாள்.  சந்தையில் சனம் குறைந்த  போது ஒரு  சிறுவன்  சைக்கிளில்  வந்து   அந்தச் சாக்கருகே  நிறுத்தினான். அவர்  எழுந்திருக்க  முனைந்தார்.  இரு கைகளையும்  நிலத்தில் ஊன்றி, இடுப்பை  மேலே உயர்த்தி,  ஒரு காலில் முட்டுக் கொடுத்து  தடி  ஒன்றை  ஊன்றி நிமிர்ந்தார்.  இடுப்பிலிருந்து ஒரு பக்கம்  சாய்ந்து ஊன்ற முடியாது தொங்கியது  ஒரு கால். அம்மா முகத்தில்  அனல் அள்ளிக் கொட்டியது போல  சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சிறுவன்  சாக்கில்  கிடந்த காய்கறிகளை ஒரு உரப்பையினுள்  போட்டுக் கட்டி  கரியரில்  வைத்துக் கட்டினான்.  அந்தமனிதர்  அம்மா  எவ்வளவோ  அழைத்தும் ஆட்டோவில்  வர  மறுத்து  சிறுவனின்  சைக்கிள்  பாரில் அமர்ந்து கொண்டார். 


சைக்கிளுக்குப்  பின்னால்  ஓட்டோ  நகர்ந்து ஊர்  ஒதுங்கிய ஒரு வீதியிலிருந்து இறங்கி    மண் ஒழுங்கைக்குள்  நுழைந்து  தட்டிப்படலை  வாசல் முன் நின்றது  அம்மா  இறங்கி  சைக்கிளின் பின்னால் உள்ளே போனாள்.  அச்சுவும் பின்னால்  போனாள். "இது தான் வீடு"  என சைக்கிள்காரச் சிறுவன் சொன்னது போல  அது வீடாக  அச்சுவுக்குத் தோன்றவில்லை. ஒரு  அடி   உயரத்துக்குக் குந்து வைத்து சுற்றுவர  ஓலைச் செத்தை  கட்டி  மேலே  தகரம்  போட்டு மூடிய  ஒன்றை  வீடு  என்று  அச்சு இதுவரை  எங்கும் கண்டதில்லை. 


"உலைவைச்சு சோறு வடிச்சுப் போட்டன் .புழுக்குத்தினது  வாடல்  ஏதும் மிஞ்சினதேயப்பா. உடன கறிச்சமைச்சுத் தந்திடுவன்"   கேட்டுக்கொண்டே  வெளியே  வந்த  பெண்  புதியவர்களைக்  கண்டதும் சற்றுத் தடுமாறினாள்.  போசாக்கற்ற வறுமையின்  குழந்தைகள்  சில அச்சுவிலும் குறைந்த வயதுகளில்  வாசலால்  எட்டி  அவர்களை  வேடிக்கை பார்த்தனர்.  அவளுக்கு  என்னவோ  போலிருந்தது   வெளியே வந்து தட்டிப்படலையையும்  கரையான் புற்றெடுத்தவேலியையும்  மண்  ஒழுங்கையையும்  வேடிக்கை  பார்த்துக் கொண்டு  அம்மாவுக்காகக் காத்திருந்தாள்.  


ஓரளவு  நேரத்துக்குப் பிறகு  வந்த  அம்மாவின் முகம் இறுகிப் போயிருந்தது. உதடுகளை  அழுந்தக் கடித்திருந்தாள்.  வாசல்  வரை  தடியூன்றிக் கொண்டு  சாய்ந்து சாய்ந்து நடந்து  வந்து விடை கொடுத்த  அந்த மனிதர்,  அச்சுவின்  தலையில்  உரிமையுடன் வருடி , கன்னப் பக்கமாய்  முகவாயை  ஏந்தி " போயிற்று  வாங்கோம்மா  நல்லாப் படிச்சு  பெரிய  ஆளா  பெயர் சொல்ல  வாழோணும்  பிள்ளை"  என்று சொன்ன குரலிலும்  காய்த்துக் கிடந்த கரடுமுரடான  அந்தக் கரங்களின்  வருடலிலும்  மிகவும் நெருக்கமும் வாஞ்சையும்  நிறைந்திருந்தது  போல  உணர்ந்தாள்  அச்சு. 


வீடு  வந்து  சேரும் வரை  அம்மா  அதே இறுக்கத்திலேயே  இருந்தாள்.  வழியில்  எதுவும் பேசவில்லை.  கடித்திருந்த  உதடுகளைப் பிரித்தால்  கதறுவாளோ  கடூரமாகக் கத்துவாளோ   போன்ற தோரணையில்  இருந்தாள். மதியம் கடந்து  மாலையாகிக் கொண்டிருந்தது . பசித்தது.  அச்சுவுக்குப் பசிப்பதைப் பொறுக்காத அம்மா  இன்று வழியில்  ஏதாவது  குடிக்க  வாங்கித் தரட்டுமா  என்று கூடக் கேட்கவில்லை ..  


வீட்டுக்கு  வந்ததும்   அச்சு  அவசரமாக  வாஷ்   ரூமுக்குப்  போய்  பிரஷ்  ஆகி வந்து   சாப்பாட்டு மேசையில்   மூடியிருந்த உணவுகளின் மூடிகளை  நீக்கினாள்.  அம்மம்மா  பரிமாற  ஓடி வந்தாள். முந்திரியும்  வதக்கிய இறைச்சித் துண்டுகளும் தாராளமாக  மிதந்த நெய்ச் சோற்றை ஒழுக ஒழுக  தட்டில்  வைத்தாள்  அம்மம்மா .  ஆட்டுக்கறிப் பிரட்டலையும் , ஒரு மீன் பொரியலையும்  எடுத்துத் தட்டில்  வைத்துக் கொண்டு  டீவீக்கு  நேரே இருந்த  ஆடுகதிரையில்  அமர்ந்தாள்.  "உங்களுக்கெண்டு  இறால் நண்டு  எல்லாம் சமைச்சு வைச்சிருக்கிறன்  இதென்ன  வெறுஞ்சோற்றைச் சாப்பிட்டுக் கொண்டு " என சொல்லியவாறே  அச்சு  மறுக்கமறுக்க  சாப்பாட்டுக் கோப்பையில்  விதவிதமாகப் பரப்பினாள் அம்மம்மா. 


  அம்மா  உள்ளே  வராமல்  வெளி வராந்தாவில்  போட்டிருந்த  கதிரைகளில்  ஒன்றில் பொம்மை  போல அமர்ந்திருந்தாள். கண்கள் , கவனிப்பாரற்றுப் பாழடைந்து கிடக்கும்  அம்மா வளர்ந்த வீட்டை நோக்கியிருந்தன . அம்மம்மா  அம்மாவை  சாப்பிட அழைத்தாள்.  அம்மா  அழைப்பை  உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

"என்ன  ஆச்சுப் பிள்ளை  உனக்கு. எங்கை  போட்டு வந்தனி ?" என்றாள்  அம்மம்மா.  

அம்மா நிமிர்தாள்.  

 "டானியேல்  அண்ணாவைப் பார்க்க" 


அச்சு  திடுக்குற்றுப் பார்த்தாள்


"ஆர்....  ஓ......  பொடி  உசிரோட  இருக்குதோ ? வந்தனி  சங்கையாக நாலு இடம்   திரிஞ்சு திண்டு குடிச்சு  சந்தோசமா  போறதை விட்டு  உதுகளை  எல்லாம் ஏன்  தேடித் போறாய்?"


"வேறை  என்ன  விசர்  தான்§  அம்மம்மா கொடுத்த உசாரில்  அப்பாவின் குரல்  இப்போது  சத்தமாகவண்டி பிராங்க்பெர்ட்   விமானநிலையத்தை நோக்கி  ஓடிக்கொண்டிருந்தது. ஜன்னல் கரையில் அமர்ந்து வேகமாக  விடைகொடுத்து நகரும் கட்டடங்களையும்  மரங்களையும்  பார்த்துக்கொண்டிருந்த அச்சு  அருகிலிருந்த அம்மாவின்  பக்கம் திரும்பினாள். அம்மாவின்  முகத்தில் ஒரு வித ஒளிர்வையும் , இனங்காண முடியாவோர் இறுக்கத்தையும் கவனித்தாள்

 ஊருக்குப்போவதாக  முடிவெடுத்த  நேரத்திலிருந்தே  அம்மாவின் முகத்தில் அந்த வித்தியாசத்தை  அவதானித்திருந்தாள் அச்சு. பொதுவாகவே ஊருக்கு வெளிக்கிடும் ஒவ்வொரு தரத்திலும்  அம்மாவின்  முகத்தில் ஒரு பிரத்தியேக  மாற்றம்  தெரிவதை அவள் அவதானித்திருக்கிறாள்.    ஊரில் நிற்கும் நாட்களில் குடத்தில் இருக்கும் தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட  அவாவும் ஒரு காகத்தின் அதகடி  அவள் கண்களில்  அலைபாய்ந்து கொண்டிருக்கும்.    ஆனாலும் . மீண்டும் ஐரோப்பாவுக்குத்  திரும்பி வரும் போது அவள் எதிர்பார்த்த  எதுவோ நடக்கவில்லையான  ஏக்கம் கண்களில்  கலங்கலாக  எஞ்சி வெறித்து நிற்கும். , வந்த  பின் அது எப்போதும் போல  எழுதிவைத்த கண்கள் போலாகி விடும் .அம்மா  வழமைபோல வேலைத்தளம் வீடு என இயந்திரகதியில்  இயங்க  ஆரம்பித்து விடுவாள். எந்த இயக்கத்தின் போதும் மாற்றமற்று   அந்தக் கண்கள்   அச்சுவின் பார்வைக்கு  சித்திரத்தில் எழுதிய கண்களைப் போலிருக்கும்.  


அச்சுவின் சிறுவயதிலிருந்தே அம்மா எப்போதாவது தானும்  அச்சுவும்  தனியாக உள்ள  நேரங்களில்  கதைகள் சொல்லுவாள். அவை யாரோ  எழுதிவைத்தவையல்ல.  அம்மாவின் கதைகள் அம்மாவிடமிருந்து தான் வந்தன.  .  அந்தக் கதைகள் அவள்  பிறந்து  வளர்ந்த  மண் பற்றியதாக  இருந்தன.  


அம்மாவின்  கதைகளில்  வந்த ,  அநேகமாக    நிறைய களைத்து  வியர்த்தவர்களாக   எப்போதும் இருக்கும்  அந்த நபர்களிடம்   ஒரு நிமிர்வு  இருந்தது.  அப்படியான  சிலரின் பெயர்களை அடிக்கடி  உபயோகித்தாள் .


அப்படி  அவள்  உபயோகித்த  பெயர்களில்  ஒன்று  டானியேல்.   வேறு யாருடையதோ கதைகளைச் சொல்லும் போது  கட்டாயம் போலும் , நிராகரிக்க முடியாதது  போலும் சிலவேளைகளில்   இந்தப் பெயர் வந்து புகுந்து கொள்ளும்.  புகுந்து  கொண்டதானால் சட்டென  அந்தக் கதை தடைப்பட்டு  விடும்.  அம்மா  இலக்கற்று  எங்கோ வெறிப்பாள். பட்டென  அவள் கண்கள் கலங்கி  முட்டும் . ஏதோ  தவறு செய்த பதட்டத்தில் உதடும் அவள் கைகளும்  நடுங்கும்.  அதற்கு மேல்  அம்மாவை  இழுத்து,  விட்ட இடத்திலிருந்து தொடர வைத்தாலும் , சுவாரசியம் அற்று ஏதோ  ஒப்புக்கு  இரண்டு வரிகளில்  கதை முடித்து  விட்டு அச்சுவின் தலையைத்  தடவியவாறே  "தப்புச் செய்திட்டேன்  அச்சு "என்பாள். 

"உனக்கென்று  உள்ள   இரகசியங்களை  மனதில்  மறைத்து வைக்கப் பழகிக் கொள் " என்பாள்.  இன்னோர்  இப்படியான  பொழுதில் . . குற்றஉணர்ச்சியற்று  வாழ்தலே  வாழ்வின் மிகப்பெரும் நிம்மதி . நீ உனக்கானவைகளை  உனக்குள் வைத்திருக்கக் கற்றுக் கொள்  சம்பவங்களோடு  சம்பந்தமில்லாத  எவரிடமும் எதையும்  என்றும் உளறி விடாதே"  என்பாள். 


அச்சு வளர்ந்த போது, அம்மாவின் கதைகளிலிருந்து  அம்மா வளர்ந்த  வீட்டைச் சுற்றி  போராளி முகாம்கள்  இருந்ததைப் புரிந்து  கொண்டாள்.  அம்மா  சிறுமியாக  இருந்த போதிருந்தே  அவர்களுக்கு  மத்தியில்  வளர்ந்ததனால்  அவர்களுடன்  அதிக  நெருக்கம் கொண்டவளாகவும்,   அவர்களது நம்பிக்கைக்கு   உரியவளாகவும்  இருந்திருக்கிறாள். ஒரு காலத்தில்  அவளது  சுற்றம்  சூழல்  எல்லாம்  அவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.   அவள் தன் வீட்டு  வாசல் தாண்டுவதானாலும்  அவர்களைக் கடந்தே செல்லவேண்டியிருந்திருக்கிறது.  என்றான  சூழலில்  அவளுக்கு  பலரைப்பற்றியும்  நிறையவே  தெரிந்திருக்கிறது. அவர்களது  குடும்பங்களுடன்  பரிட்சயம் இருந்திருக்கிறது என்பதை  ஊகித்துக் கொண்டாள்.


                                       


 


அச்சுவும் அம்மாவும் சேர்ந்திருந்து வெளிநாட்டுப் போராட்டப் படங்கள்  பார்க்கும் போது  அம்மா  அடிக்கடி முகத்தைச் சுளித்துக் கொள்வாள். உடலைச் சுற்றி  துப்பாக்கி ரவைகளை  அணிந்திருக்கும்  நடிகனைப்  பார்க்கும் போது "துடைப்பக்கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டியது போலிருக்கு .  ஆயுதம் தூக்கிற  நிமிர்வும்  தீரமும்   கண்களில  இருக்கவேணும்  தெரியுமோ  அச்சு". என எழுந்து கொள்வாள் .  "வாம்மா " என அழைத்தால்  "அப்போது டானியல் ரவைக்கோர்வைகளை உடலில் சுற்றிக் கொண்டு தன்னுடைய  முகாம் போராளிகளை  வழிநடத்தி களத்துக்குக் கூட்டிப்போக  வாகனத்துக்கு  அருகில் ஆயத்தமாய்  நிற்பார்  பார். அந்த நிமிர்வுக்கு இந்த நோஞ்சான்  நடிகன் பிச்சை  வாங்க வேண்டும்" என்பாள். இன்னொரு நாள் அந்தப் பெயர் தேவன்  ஆக மாறியிருக்கும். வேறொருநாள்  அது வெள்ளை  என்றிருக்கும்.. வேறும் நாட்களில் அது வேறு வேறாக இருக்கும்.   ஆனாலும்  . கண்கள் ஏதோ   ஒரு காலத்தை    தன் பார்வையில் சுமந்திருக்கும் அப்போது  அம்மாவின் முகம்  வேறு மாதிரி ஜொலிக்கும். . ஆனால் டானியேல் என்ற பெயர் குறிப்பிட நேர்ந்து விட்டால் ,  பின் சட்டென  உடைந்து அதே குற்றவாளித் தோரணையில்   குறுகி ஒடுங்கிப் போவாள். 


அம்மாவின் கதைகளிலிருந்து, ஒரு முகாமின்  பொறுப்பாளனாகவும், ஒரு படைப்பிரிவை  வழிநடத்துபவனாகவும், திடகாத்திரமான நிமிர்ந்த  மனிதனாகவும்  அச்சு  அந்த டானியலை தனக்குள்  உருவாக்கியிருந்தாள்.  டானியல்  பற்றிப் பேசும் போது அவளில் ஏற்படும் உணர்வு மாற்றங்களை அச்சு  வளரும் போது  தனக்குப்  புரிந்த விதத்தில்  கணிக்கத் தொடங்கியிருந்தாள் 


அம்மாவுக்கும்  அச்சுவின்  தந்தைக்கும் பெரிதாக  நெருக்கம் எதுவும் கிடையாது.  மாதத் தொடக்கத்தில் தனக்கான  அத்தனை செலவையும் கணக்குப் பார்த்து மேசையில்  வைத்து விடும் அம்மா அதிக வசதிகள் கொண்ட அந்த வீட்டில்   அன்னியப்பட்டு ஒதுங்கி அச்சுவுக்காகவே அந்த வீட்டில்  இருப்பது போல  தோன்றும்.  அந்த   நெருக்கமின்மைக்கும்  டானியேல்  தான் காரணமாக இருக்கவேண்டும் என  எண்ணத் தலைப்பட்டு  பின்னாளில்  அதுதான் என  தனக்குள் உறுதி செய்தும்  கொண்டாள்.    பெற்றோர்  எனினும் அவர்கள்  தனிப்பட்ட  வாழ்வை  அலசுவதும் விமர்சிப்பதும்  தனக்கு  உரிமையற்றது  என்ற  மேல்நாட்டு  மனப்பான்மையில்   வளர்த்திருந்தாள்.  


அச்சு தன்   அம்மாவை அவளது   இயல்பான இருப்பில்  மென்மையானவளாகவே புரிந்து வைத்திருக்கிறாள்.  , அதிகமாய்  அதிர்ந்து பேசிக் கூட  அச்சு பார்த்ததில்லை.   ஆனால் "கொம்மா  விசரி  வாழத்தெரியாத லூசு"  என  அடிக்கடி  எரிச்சலாக முணுமுணுக்கும்   அவளது  தந்தை  அம்மாவின்  எதிரில்  சொல்லும் போது அம்மா  தலை நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்ப்பாள். அந்தப்  பார்வை  மிகப் பயங்கரமான  சீறும்அனல் போலிருக்கும் .  "அடுத்தவன்  வாழ்க்கையைப் பறித்து  சுகம் தேடும்  எல்லாருக்கும்   மற்றவர்கள்  எல்லாம் வாழத் தெரியாத பைத்தியமாகத் தான் தெரியும் " என்பாள். ஒவ்வொரு சொல்லும் பற்களில்  நெரிபட்டு  சத்தமற்றுத் தெறிக்கும்.  அப்போது அம்மாவைப் பார்க்க  மிகப் பயங்கரமாக இருக்கும். அதற்கு மேல்  பேசமாட்டாள்.  விலகிச் சென்று விடுவாள். 


"அந்த மண்ணை  எவ்வளவோ  நேசிக்கும் நீ  ஏன்மா  இங்கு வந்தாய்?"  என அச்சு ஒரு போது தன் அம்மாவிடம் கேட்டாள்.. "நேசித்ததால்  தான் " என பெருமூச்சுடன் அம்மா  விலகிப் போனாள்.  அம்மா  பதில் சொல்லாத விடயங்களில்  எப்படி முயன்றாலும்  பதில் பெற்று விட முடியாது  என்பது  அச்சுவுக்குத் தெரியும்  ஆதலால் பதில் கிடையாத கேள்விகளை  அவள்  திரும்பவும் எப்போதும் கேட்பதில்லை. 

ஆனாலும்  அம்மாவின் சகோதரர்கள்  வந்து போகும்  போது  பேசிக்கொள்வதிலிருந்து  அம்மா போராளிகளுடன்  இணைந்து  சென்று விடக் கூடும்  என்ற  பயத்தில் வெளிநாட்டிலிருந்த  சகோதரர்கள்  இங்கு  அழைத்துக் கொண்டார்கள்  என்பதும்,  அப்பாவுக்கு  மாரடைப்பு வந்து விடும் ,  நான் கிணத்துக்குள்  குதித்து விடுவேன்  என பயங்காட்டி அம்மாவின் தாய்  அம்மாவைச் சம்மதிக்க வைத்து   வெளிநாட்டுக்கு  அனுப்பியிருக்கிறார்கள்  என்பதும் இங்கு வந்த பின்  அச்சுவின் அப்பாவைத்  திருமணம் செய்து  வைத்திருக்கிறார்கள்  என்பதும் , திருமணம்  செய்த பின் அச்சுவின் அப்பாவுக்கு  வதிவிட  அனுமதியும்  அச்சுவும் ஒரே காலப்பகுதியில்  கிடைக்கப்பெற்றிருக்கிறார்கள்  என்பதும் புரிந்தது. 


,  இந்த வதிவிட  அனுமதி  கிடைக்கும் வரை  அம்மா அப்பாவுடன்,  சாதாரணமாகத்தான்  இருந்திருக்கிறாள். இப்போது போல எந்த இறுக்கமும் அற்றவளாக , அச்சுவுடன்  பேசுவதைப்  போல  அல்லது  அதைவிட  அதிகமாக  அவள்  அப்பாவுடன்  அனைத்தையும்  பேசியிருக்கிறாள்..  எப்போதும் தான் வளர்ந்த சூழல் பற்றி,  சூழ  இருந்த மனிதர்கள் பற்றி போராட்டம் பற்றி,  களங்கள்  பற்றி,  காயங்கள்  பற்றி,  அவர்களின் குடும்ப  அவலங்கள்  பற்றி தான் அறிந்தவையெல்லாம்  அம்மா  பேசியிருக்கிறாள்.      அதன் பின் தான்  ஏதோ ஆகியிருக்கிறது.  நொறுங்கிப் போயிருக்கிறது  என்பதை  அச்சு புரிந்து கொண்டாள். .


அவர்கள்  கட்டுநாயக்கா  விமான நிலையத்தில்  இறங்கினார்கள்.அம்மாவின் கண்கள் வரைந்தது போலல்லாது  ஒளிரத்தொடங்கியத்தை  அது கலங்கியதை  அச்சு அவதானித்தாள்.  இம்முறைப் பயணத்தில்  அச்சு  பதினெட்டு வயது நிரம்பிய, பல்கலைக்கழகம் செல்லும் பெரிய பெண்ணாக வளர்ந்து  விட்டிருக்கிறாள் . தன்னைச் சுற்றிய  ஒவ்வொரு விடயங்களையும்  ஆராய்பவளாகவும்  அறிந்து கொள்ள  விரும்புபவளாகவும் தேடல்கள் கொண்டவளாகவும் மாறியிருக்கிறாள்.      


அவர்கள்  யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்கள். இடையில்  அனுராதபுரத்திலும்  , புத்தளத்திலும்  உணவுக்காக வாகனம் நிறுத்தப்பட்ட போது  இறங்குவதற்கும் உண்பதற்கும் அம்மா  ஆர்வம் காட்டாது  வாகனத்துக்குள்ளேயே  அமர்ந்து கொண்டதை தாம்  இறங்கிச் செல்லும் போது  கவனித்தாள்.  


பிறகு சுற்றுச் சூழல்  கானல்வெளி போலிருந்த  ஆளரவமற்ற இடத்தில்  வாகனம் நிறுத்தப்பட்ட போது  அம்மா இறங்கினாள். கண்களுக்குள்  அந்தப் பகுதி முழுவதையும்  விழுங்கி விடுபவள்  போலப் பார்த்தாள். இவர்கள்  அம்மாச்சி உணவகத்தில் தேநீரும்  வடையும்  உண்டு விட்டு  வந்தார்கள்.   வாகனத்தில் ஏறி  அமர்ந்த போது நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டுச்  சொன்னாள், "நாமெல்லாம்  ஐரோப்பியப்பிரஜைகளாக  பாதுகாப்பாக வாழ்வதற்கு  மூலகாரணமான  மூச்சுகள்  இந்த  அனல் வெளிகளில்  அவலமாக  மூசிக் கொண்டிருக்கக் கூடும் " என்று.  அச்சுவுக்கு  அரைகுறையாகவே அது புரிந்தது. 


அதன் பின் வாகனம் நகர நகர அம்மா வெளிக்காட்சிகள் அனைத்தையும்  கலங்கிய கண்களுக்குள் அப்படியே கோலி எடுத்துவிடுவது போல் பார்த்திருந்தாள்.  


அவர்கள்  வீட்டின் முன்  வாகனம் நின்று  கோன்  அடித்ததும்  பாட்டியும் தாத்தாவும்  அரக்கப்பரக்க  ஓடிவந்து  பெரிய  உயர்ந்த கேற்றை  அகலத் திறந்தார்கள்.  கேற்றிலிருந்து  வீட்டு வாசல் வரை சீமேந்துச் சார்  இழுத்து சிவப்புச் சாயமடித்த  பாதையில் ஓடி நின்றது வாகனம். இறங்கினார்கள் .   இரண்டடுக்கில் பெரிய   மாடிவீடு பொலிவாக மின்னியது. 


பாட்டி வந்து கட்டிப்பிடித்து  முத்தமிட்டாள்.  தாத்தா  "வாருங்கோ குஞ்சு"  எனக் கூட்டிக்கொண்டு முன்னே நடந்தார்.  கூடவே வந்த  பாட்டி சொன்னாள்  "எல்லாம் பிள்ளைக்கு வசதியா  இருக்கோ எண்டு பாருங்கோ .  நீங்கள்  மாமாமார்  குடும்பத்தோட  லீவுக்கு வந்து நிண்டு போறதுக்காக  அங்கே நீங்கள் இருக்கிற  வசதிகளோட  பார்த்துப் பார்த்துக் கட்டிவிச்சனான்கள் " என்று .  அம்மா வாசல் படியில்  ஏறி நின்று மதிலுக்கு  அந்தப்பக்கம் கவனிப்பாரற்று மங்கிக்  கிடந்த  தான் பிறந்து வளர்ந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  


அம்மாவின் அம்மா  அம்மாவின் அருகில் போனாள். "உதென்ன பிள்ளை பழையதை  எட்டிப்பார்த்துக்கொண்டு நிக்கிறாய்.  உள்ளவந்து எதையும் குடிச்சுச் சாப்பிடன் " என்றாள்.  அம்மா  திரும்பினாள். முகம் கசங்கியிருந்தது.  

"இப்ப வெளிக்கிட்டுத் திரிய   ஆமிப்பயம்  இல்லையோ?"  என்றாள்


"சீ சீ  அவங்கள்  ஒண்டுக்கும் வராங்கள்"


"அப்ப போராளிகள்  எல்லாம் சாதாரணமா  திரியலாமோ?" 


"ஓம்  உங்க  ஆர்  இப்ப போராளி. எல்லாரும் தான் திரியீனம் .  ஆருக்கு ஆரெண்டு தெரியும்" 


"எங்கட  வீட்டுக்குப் பக்கத்தில  இருந்தவை  ஆரையும்  கண்டனீங்களோ?" 


"க்கும்  விசர் தொடங்கிவிட்டுது."   அச்சுவின் அப்பா வெளிநாட்டு விஸ்கியை கண்ணாடிக் குவளையில் ஊற்றிக்கொண்டே , பொரித்த கோழிக்கால் ஒன்றை வாயில் வைத்துக் கடித்த படி  முணுமுணுத்தார்.  அம்மா அதைச் சட்டை செய்யவில்லை  இப்போது.  தனது விசாரிப்பில்  மும்முரமாக  இருந்தாள்


"ஆருக்குத் தெரியும் பிள்ளை  இருக்குதுகளோ  செத்துப் போச்சுதுகளோ  எண்டு.  பழசை  தேடுறதை  விட்டுப்போட்டு  எல்லாத்தையும்  மறந்து  சந்தோசமா  வாழுற வழியைப்பார். " 


"ராசையா அண்ணை  இங்க ஊரில   தான் இருக்கிறாரோ..?"  


"ஓமோம்  அவன் இஞ்ச  தான்.  நீங்கள் வாறியள்  எண்ட உடன  ஓடித்திரிஞ்சு  கழுவத் துடைக்க  இடிக்க  என்று  ஆள்ப்பிடிச்சு  எல்லா அலுவலும் பார்த்தது  அவன் தான்.  சாமான் சக்கட்டு வாங்கித்தர பின்னேரமா  வருவான். "


அம்மா  பின்னேரம் வரை  காத்திருந்தாள்.  ராசையா  அண்ணை  வீட்டு வாசல் தாண்டி உள்ளே  வராமல்  வெளியிலேயே  நின்று  நலம் விசாரித்தார் .  அம்மா வெளியே  போய்  உள்ளே அழைத்தாள். வெளிவாசலுடன் நின்று கொண்டார். அம்மா எதற்கோ  ஆத்திரத்துடன்  காலைத் தரையில்  உதைத்து  நடந்தாள்.  கதிரையை  இழுத்துப் போட்டு  வெளி வராண்டாவில் வற்புறுத்தி  அமரவைத்தாள்.  அம்மாவும்  அவரும் பேசிக்கொண்டதில்  மிகுந்த அன்னியோன்னியம்  இருந்ததை  அச்சு  கவனித்தாள். 


"விசாரிச்சீங்களோ  அண்ணை?". 


"ஓம் பிள்ளை.  ஒவ்வொரு  தரமும்  நீங்கள்  வந்து  சொல்லிப்போட்டுப்  போகும் போது  விசாரிக்காமல்  இருப்பேனோ.   நானே சொல்லவேணும்  எண்டு தான்  காத்திருந்தனான் "


"அப்போ ?"


"ஓம்   தகவல்  கிடைச்சது.  ஆள்  உயிரோட  தான் இருக்குதாம்." 


பின்  ஏதோ  தொடர்ந்து  பேசிக்கொண்டிருந்தார்கள். "முகுந்தன்  எண்டு சொன்னால்  தான் தெரியும்.   சந்தை  நேரம் தான்   ஆளைப் பிடிப்பது  இலகு  பிள்ளை ." என்பது மட்டும்  அச்சுவின் காதில்  விழுந்தது  அம்மாவின் முகத்தை  இப்போது  ஹாலில்  இருந்த அச்சுவால்  கணிப்பிட முடியவில்லை.  அவள் அச்சுவுக்கு முதுகு காட்டி  அமர்ந்திருந்தாள்.  


அடுத்த நாள்  காலையில் அம்மா  மிகவும் பரபரப்பாக இருந்தாள்.  தாத்தாவிடம் சொல்லி  ஒரு ஓட்டோவை  வரவழைத்தாள். அச்சுவையும்  துணைக்கு அழைத்துக் கொண்டு  வெளிக்கிட்டாள்.  எங்கே  என்று கேட்கத் தோன்றவில்லை.  அது அச்சுவுக்குப் பரீட்சயமில்லாத  இடம்.  ஆகையால்  யாராவது  அழைத்துச் செல்லும் இடத்துக்குத் தான் போக முடியும். அத்துடன்  அம்மாவின் பரபரப்பு  அச்சுவுக்குப் புரிந்தது  ஆதலால்  கேட்கத் தோன்றவில்லை. 


நீண்ட தூரம்  போனார்கள் .  ஓட்டோ  ஒருமணி  நேரத்துக்கும் மேலாக  ஓடியது.  ஒரு பெரிய  சந்தைக்கருகே ஓட்டோவை  நிறுத்தி காத்திருப்பில்  வைத்து  இறங்கினாள்  அம்மா. அச்சுவை  இறங்கு என்றோ  இறங்காதே  என்றோ  சொல்லாததால்  அம்மா  உடனே வந்து விடுவாள்  என  அவள் ஓட்டோவுக்குள்  காத்திருந்தாள்.  வாசலில் பெரும்கடை  விரித்திருந்த  ஒருவரிடம்  அம்மா  எதுவோ   விசாரிப்பது  தெரிந்தது. அச்சு அருகே  இருந்த கடைகளை வேடிக்கை பார்த்தாள்.  பின் ,  மொபைலை  எடுத்து  கண்டிகிரஷ்சாகா  விளையாட ஆரம்பித்தாள்.


விளையாடிச் சலித்து நிமிர்ந்தாள்.   அம்மா   வேறு யாருடனோ  குனிந்து  பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அருகே  சென்றாள் .  கறுத்து வறண்டு மெலிந்து கிடந்த  அந்த மனிதரின் முகத்தை மறைத்திருந்தது  பலநாட்கள்  சவரம் செய்யப்படாத  நரைத்த  தாடி மீசை. முன்நெற்றி முடி முழுவதும்  கொட்டியிருந்தது. வழமைக்கு ஒவ்வாத  விதமாக காலை மடித்து, ஒரு கரத்தில் தன் உடல் பாரத்தை  ஊன்றி   சாய்வாக   ஒரு சாக்கில்  அமர்ந்திருந்த அவர் நிமிர்ந்து முகம் பார்க்க  அல்லது  காட்ட விரும்பாதவர்    போலக் குனிந்து கொண்டே  சன்னமான குரலில் பேசிகொண்டிருந்தார். .  அவர்  முன்னே    நான்கைந்து  தேங்காய்களும்  வெங்காயம், பச்சைமிளகாய், சில  வாடிய  கீரைக்கட்டுகள், கொஞ்சம் கத்தரி  தக்காளி  என  ஒரு  சாக்கில்  பிரித்து வைக்கக் கூடிய  சிறு சிறு குவியல்கள்  பரப்பபட்டிருந்தன.  


அச்சுவுக்குச் சலிப்பாக  இருந்தது  அம்மா அவருக்காகக்  காத்திருந்தாள்.  சந்தையில் சனம் குறைந்த  போது ஒரு  சிறுவன்  சைக்கிளில்  வந்து   அந்தச் சாக்கருகே  நிறுத்தினான். அவர்  எழுந்திருக்க  முனைந்தார்.  இரு கைகளையும்  நிலத்தில் ஊன்றி, இடுப்பை  மேலே உயர்த்தி,  ஒரு காலில் முட்டுக் கொடுத்து  தடி  ஒன்றை  ஊன்றி நிமிர்ந்தார்.  இடுப்பிலிருந்து ஒரு பக்கம்  சாய்ந்து ஊன்ற முடியாது தொங்கியது  ஒரு கால். அம்மா முகத்தில்  அனல் அள்ளிக் கொட்டியது போல  சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சிறுவன்  சாக்கில்  கிடந்த காய்கறிகளை ஒரு உரப்பையினுள்  போட்டுக் கட்டி  கரியரில்  வைத்துக் கட்டினான்.  அந்தமனிதர்  அம்மா  எவ்வளவோ  அழைத்தும் ஆட்டோவில்  வர  மறுத்து  சிறுவனின்  சைக்கிள்  பாரில் அமர்ந்து கொண்டார். 


சைக்கிளுக்குப்  பின்னால்  ஓட்டோ  நகர்ந்து ஊர்  ஒதுங்கிய ஒரு வீதியிலிருந்து இறங்கி    மண் ஒழுங்கைக்குள்  நுழைந்து  தட்டிப்படலை  வாசல் முன் நின்றது  அம்மா  இறங்கி  சைக்கிளின் பின்னால் உள்ளே போனாள்.  அச்சுவும் பின்னால்  போனாள். "இது தான் வீடு"  என சைக்கிள்காரச் சிறுவன் சொன்னது போல  அது வீடாக  அச்சுவுக்குத் தோன்றவில்லை. ஒரு  அடி   உயரத்துக்குக் குந்து வைத்து சுற்றுவர  ஓலைச் செத்தை  கட்டி  மேலே  தகரம்  போட்டு மூடிய  ஒன்றை  வீடு  என்று  அச்சு இதுவரை  எங்கும் கண்டதில்லை. 


"உலைவைச்சு சோறு வடிச்சுப் போட்டன் .புழுக்குத்தினது  வாடல்  ஏதும் மிஞ்சினதேயப்பா. உடன கறிச்சமைச்சுத் தந்திடுவன்"   கேட்டுக்கொண்டே  வெளியே  வந்த  பெண்  புதியவர்களைக்  கண்டதும் சற்றுத் தடுமாறினாள்.  போசாக்கற்ற வறுமையின்  குழந்தைகள்  சில அச்சுவிலும் குறைந்த வயதுகளில்  வாசலால்  எட்டி  அவர்களை  வேடிக்கை பார்த்தனர்.  அவளுக்கு  என்னவோ  போலிருந்தது   வெளியே வந்து தட்டிப்படலையையும்  கரையான் புற்றெடுத்தவேலியையும்  மண்  ஒழுங்கையையும்  வேடிக்கை  பார்த்துக் கொண்டு  அம்மாவுக்காகக் காத்திருந்தாள்.  


ஓரளவு  நேரத்துக்குப் பிறகு  வந்த  அம்மாவின் முகம் இறுகிப் போயிருந்தது. உதடுகளை  அழுந்தக் கடித்திருந்தாள்.  வாசல்  வரை  தடியூன்றிக் கொண்டு  சாய்ந்து சாய்ந்து நடந்து  வந்து விடை கொடுத்த  அந்த மனிதர்,  அச்சுவின்  தலையில்  உரிமையுடன் வருடி , கன்னப் பக்கமாய்  முகவாயை  ஏந்தி " போயிற்று  வாங்கோம்மா  நல்லாப் படிச்சு  பெரிய  ஆளா  பெயர் சொல்ல  வாழோணும்  பிள்ளை"  என்று சொன்ன குரலிலும்  காய்த்துக் கிடந்த கரடுமுரடான  அந்தக் கரங்களின்  வருடலிலும்  மிகவும் நெருக்கமும் வாஞ்சையும்  நிறைந்திருந்தது  போல  உணர்ந்தாள்  அச்சு. 


வீடு  வந்து  சேரும் வரை  அம்மா  அதே இறுக்கத்திலேயே  இருந்தாள்.  வழியில்  எதுவும் பேசவில்லை.  கடித்திருந்த  உதடுகளைப் பிரித்தால்  கதறுவாளோ  கடூரமாகக் கத்துவாளோ   போன்ற தோரணையில்  இருந்தாள். மதியம் கடந்து  மாலையாகிக் கொண்டிருந்தது . பசித்தது.  அச்சுவுக்குப் பசிப்பதைப் பொறுக்காத அம்மா  இன்று வழியில்  ஏதாவது  குடிக்க  வாங்கித் தரட்டுமா  என்று கூடக் கேட்கவில்லை ..  


வீட்டுக்கு  வந்ததும்   அச்சு  அவசரமாக  வாஷ்   ரூமுக்குப்  போய்  பிரஷ்  ஆகி வந்து   சாப்பாட்டு மேசையில்   மூடியிருந்த உணவுகளின் மூடிகளை  நீக்கினாள்.  அம்மம்மா  பரிமாற  ஓடி வந்தாள். முந்திரியும்  வதக்கிய இறைச்சித் துண்டுகளும் தாராளமாக  மிதந்த நெய்ச் சோற்றை ஒழுக ஒழுக  தட்டில்  வைத்தாள்  அம்மம்மா .  ஆட்டுக்கறிப் பிரட்டலையும் , ஒரு மீன் பொரியலையும்  எடுத்துத் தட்டில்  வைத்துக் கொண்டு  டீவீக்கு  நேரே இருந்த  ஆடுகதிரையில்  அமர்ந்தாள்.  "உங்களுக்கெண்டு  இறால் நண்டு  எல்லாம் சமைச்சு வைச்சிருக்கிறன்  இதென்ன  வெறுஞ்சோற்றைச் சாப்பிட்டுக் கொண்டு " என சொல்லியவாறே  அச்சு  மறுக்கமறுக்க  சாப்பாட்டுக் கோப்பையில்  விதவிதமாகப் பரப்பினாள் அம்மம்மா. 


  அம்மா  உள்ளே  வராமல்  வெளி வராந்தாவில்  போட்டிருந்த  கதிரைகளில்  ஒன்றில் பொம்மை  போல அமர்ந்திருந்தாள். கண்கள் , கவனிப்பாரற்றுப் பாழடைந்து கிடக்கும்  அம்மா வளர்ந்த வீட்டை நோக்கியிருந்தன . அம்மம்மா  அம்மாவை  சாப்பிட அழைத்தாள்.  அம்மா  அழைப்பை  உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

"என்ன  ஆச்சுப் பிள்ளை  உனக்கு. எங்கை  போட்டு வந்தனி ?" என்றாள்  அம்மம்மா.  

அம்மா நிமிர்தாள்.  

வே வெளிவந்தது. 


அம்மா நெருப்பு போல எழுந்தாள்


"ஓம்  விசர்  தான். அந்த விசரில  தான்    விசம் எண்டு அறியாது  எல்லாத்தையும்  சொன்னனான்.  அணைக்கும் போதும் , படுக்கும் போதும் , அரைநித்திரையிலும் நயவஞ்சகமா காதல் கதை பேசி  நம்பிக்கை கொடுத்து  அவங்களுக்கு  உதவுவன் எண்டு நம்பிக்கை  தந்ததால  தான்  எனக்குத்தெரிஞ்ச  எல்லாரையம்  பற்றி, அவங்களுக்குப் பின்னால  இருந்த எல்லாக் கதைகளும்   சொன்னனான். 


டானியேல் இயக்கத்துக்கு  வந்தப்பிறகு  பொம்பர் போட்ட குண்டில வீடு சிதறி குடும்பத்தில  சாவுகள் விழுந்து போச்சு, தாயும் சகோதரிகளும் ஒதுங்கக் கூரையில்லாமல்  நிக்குதுகள்.  இவ்வளவு   பயிற்சி  எடுத்து , இத்தனை களங்களில் அனுபவம் பெற்றப் பிறகு குடும்பத்தை  நினைச்சு  தேசக் கடமையை விட்டிட்டுப் போகமாட்டன் என்று நின்ற மனிதனின் குடும்பம். அது  ஒதுங்க  ஒரு குடிசையாவது  கட்டிக் குடுக்க வேணும். அது  எங்கட கடமை என்று கேட்டன்.  டானியல்  அண்ணாவுக்கு  எதுவும் தெரியாமல்  இருந்தாலும் அவரின்ர குடும்பம்  நான் கொடுத்த  வாக்குறுதியை  தங்கட  அவல  நிலையில  நம்பியிருந்தது. 


"உங்கட மருமோன்  எப்பிடி நடிச்சு  என்னை  நம்பவைச்சு  அவையின்ர  விபரம் எல்லாம் கேட்டு, அந்தச் சிதறின  வீட்டையும் படமெடுத்து  அனுப்பவைச்சு, அது அத்தனையும்  தன் குடும்பத்துக்கு  நேர்ந்த  அவலமாக கதை  சோடிச்சு, தன்னுடைய  அகதி விண்ணப்பத்தில், தான் அனுதாபத்துக்குரிய  அங்கீகரிக்கப்பட வேண்டிய  அகதி என்று  உறுதிப்படுத்தி  விசா  எடுத்தார்  என்று  கேளுங்கோ."


அம்மம்மா விழி பிதுங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.   தாத்தாவின் திகைப்பு திறந்த வாயை மூட  மறந்திருந்தது. 


 "அதுக்குப் பிறகு நான் சொன்ன கதைகளை வைத்து  விசாவுக்குக் கதை எழுதிப் பிழைக்கிற பிரபலமாகிவிட்டார் உங்கட  மருமோன். அதோட முடிஞ்சுதா  கடைசிப் போர் நேரம்  திருவோடு  ஏந்தாத குறையா  வெள்ளைக்காரரிட்டை கூட  மானம் கெட்டுக் கெஞ்சி வாங்கின காசு  எங்கை எண்டு கேளுங்கோ "


அம்மாவுக்கு மூச்சு வாங்கியது 


"கொடுத்த வாக்குறுதி , பட்ட கடன்  ஒரு கொஞ்சமாவது அடைச்சுப்போட வேணும் என்று  தான் இத்தனை காலமா  தேடினேன். ஒதுங்க  ஆனதாக ஒரு கூரை  இல்லாமலே மழையும் ஒழுக்குமா கிடந்தது சிதைஞ்சு  தாய் செத்துப்போச்சு.  போக்கிடமற்று, சகோதரிகள் போருக்குள்  முடிஞ்சு போனது  அவருக்குச் சந்தோசம் தான் "


 அம்மா  முழங்கால் மடித்து அப்படியே  தரையில்  வழுக்கி உடைந்து   அழுதாள். 


அம்மாவின் குணம்  அறிந்த அம்மம்மா  "சரி  ஏதாவது  உதவி  செய்யலாம் எழும்பு வந்து சாப்பிடு" என்றார் . 


"கேட்டேன்.  மறுத்திட்டார். தன்மானம் மட்டும் தான்  மிச்சமிருக்காம்.  அதாவது  சாகும் வரைக்கும்  மிஞ்சி இருக்கவேணும்  எண்டிட்டார்." 


அச்சுவுக்கு  உள்ளே சில்லிட்டது . 

.'புழுக்குத்தினது  வாடல்  ஏதும் மிஞ்சினதேயப்பா. உடன கறிச்சமைச்சுத் தந்திடுவன் ' என்ற  குரல் மனதுக்குள்  ஒலித்தது. 

தன் சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தாள். தட்டு நிறைய அருவருப்பாக எதுவோ  நெளிவது போலிருக்க ,அதிர்ந்து எழுந்தாள் . தட்டு கீழே விழுந்து சிதறியது. தட்டிலிருந்து தெறித்த மாமிசத் துண்டுகள்  இரத்தம் ஒழுகும் மனிதத் துண்டங்கள்  போல்  பெரிய கொடுக்குகளுடன் நெளிந்து நெளிந்து  அச்சுவை  நெருங்குவது போலிருந்தது.     கண்களை  மூடி  இரண்டு கைகளாலும்  தலையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு வீடே அதிர  வீரிடத்தொடங்கினாள்


முதல் முறையாய் அவளது தந்தை   அதிர்ந்து  திரும்பிப்பார்த்தார்.